News March 21, 2025
Gpay, PhonePe பயன்படுத்துகிறீர்களா?

ஏப்.1ஆம் தேதி முதல் NPCI (National Payments Corporation of India) புதிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த உள்ளது. பயன்பாட்டில் இல்லாத, செயலற்ற மொபைல் எண்களை வரும் 31ஆம் தேதிக்குள் நீக்க வங்கிகள், UPI செயலிகளுக்கு NPCI உத்தரவிட்டுள்ளது. இதனால், உங்கள் வங்கிக் கணக்கு செயலற்ற மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும். அதன் பின், அந்த எண்ணுடன் இணைக்கப்பட்ட PhonePe, Gpay சேவைகளைப் பெற முடியாது.
Similar News
News September 9, 2025
2029-ல் ராகுல் காந்தி தான் PM: டி.கே.சிவக்குமார் உறுதி

2029-ல் ராகுல் காந்தி கண்டிப்பாக பிரதமர் ஆவார் என கர்நாடகா DCM டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம் நாட்டிற்கு ஒரு மாற்றம் வேண்டும் எனவும், நமது அண்டை நாடுகள் எல்லாம் எதிரிகள் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுலை முதன்முதலாக CM ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். சமீபத்தில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், 2029-ல் ராகுல் PM ஆவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
விஜய்காந்த் வீட்டில் துயரம்.. இபிஎஸ் உருக்கமாக இரங்கல்

விஜயகாந்தின் மூத்த சகோதரியான டாக்டர் விஜயலட்சுமி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என்று EPS வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
பிரதமரை வீட்டுக்கு அனுப்பிய #NepoKid ஹாஷ்டேக்

நேபாளத்தில் நடந்துவரும் <<17657502>>போராட்டத்தின்<<>> உந்து சக்தியாக இருப்பது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் #NepoKid, #NepoBabies, #PoliticiansNepoBaby போன்ற ஹாஷ்டேக்ஸ் தான். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் குழந்தைகள் வசதியாக வெளிநாட்டுக்கு சென்றுபடித்து செட்டில் ஆகிவிடுவதாகவும், நாட்டில் உள்ள சாதாரண மக்களின் பிள்ளைகள் இங்கு படித்துவிட்டு வேலைக் கிடைக்காமல் வாடுவதாகவும் அந்த ஹேஷ்டேக்குகளில் பதிவுகள் வைரலாகின.