News March 21, 2025
மீண்டும் நிலநடுக்கம்; அலறிய பொதுமக்கள்…!

ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் நிகழ்ந்தது. கடந்த 13 ஆம் தேதி ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் லேசாக குலுங்கின. இந்தச் சூழலில், இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணி அளவில் 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் நேரிட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
Similar News
News September 9, 2025
2029-ல் ராகுல் காந்தி தான் PM: டி.கே.சிவக்குமார் உறுதி

2029-ல் ராகுல் காந்தி கண்டிப்பாக பிரதமர் ஆவார் என கர்நாடகா DCM டி.கே.சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நம் நாட்டிற்கு ஒரு மாற்றம் வேண்டும் எனவும், நமது அண்டை நாடுகள் எல்லாம் எதிரிகள் ஆகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ராகுலை முதன்முதலாக CM ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டார். சமீபத்தில் RJD தலைவர் தேஜஸ்வி யாதவ், 2029-ல் ராகுல் PM ஆவார் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
News September 9, 2025
விஜய்காந்த் வீட்டில் துயரம்.. இபிஎஸ் உருக்கமாக இரங்கல்

விஜயகாந்தின் மூத்த சகோதரியான டாக்டர் விஜயலட்சுமி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன் என்று EPS வேதனையுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
பிரதமரை வீட்டுக்கு அனுப்பிய #NepoKid ஹாஷ்டேக்

நேபாளத்தில் நடந்துவரும் <<17657502>>போராட்டத்தின்<<>> உந்து சக்தியாக இருப்பது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் #NepoKid, #NepoBabies, #PoliticiansNepoBaby போன்ற ஹாஷ்டேக்ஸ் தான். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் குழந்தைகள் வசதியாக வெளிநாட்டுக்கு சென்றுபடித்து செட்டில் ஆகிவிடுவதாகவும், நாட்டில் உள்ள சாதாரண மக்களின் பிள்ளைகள் இங்கு படித்துவிட்டு வேலைக் கிடைக்காமல் வாடுவதாகவும் அந்த ஹேஷ்டேக்குகளில் பதிவுகள் வைரலாகின.