News March 21, 2025
ஆன்லைனில் கடன் பெற்றவரை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்

காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்த ரூபன், கடன் செயலி மூலம் ரூ.1,800 கடன் பெற்று அந்த பணத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கு அனுப்பி வைத்து மேலும் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரூபன் ரூ.10000 அனுப்பியுள்ளார். தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே, ரூபன் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்
Similar News
News May 8, 2025
புதுவையில் ஜிப்மர் இயங்காது

மத்திய அரசு விடுமுறை தினமான புத்த பூர்ணிமாவை முன்னிட்டு புதுவை ஜிப்மரில் உள்ள புறநோயாளிகள் பிரிவு வரும் 12 ஆம் தேதி இயங்காது என்றும், திங்கட்கிழமையன்று நோயாளிகள் ஜிப்மர் வருவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் அவசரச் சிகிச்சை பிரிவு வழக்கம் போல இயங்கும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News May 8, 2025
புதுச்சேரி: உங்க தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா? பாகம்-2

புதுச்சேரி மாநில எம்.எல்.ஏ-க்கள் செல்போன் எண்கள் (பாகம்-2)
▶️ தட்டாஞ்சாவடி, ரங்கசாமி – 9600999999 ▶️ மணவெளி, செல்வம் – 9843444799 ▶️ வில்லியனூர், இரா. சிவா- 9443117925 ▶️ லாஸ்பேட்டை, வைத்தியநாதன் – 9443384020 ▶️ திரு.பட்டினம், நாக தியாகராஜன் – 9865627559 ▶️ திருநள்ளாறு, PR.சிவா – 9865536699 ▶️ பாகூர், செந்தில் குமார் – 9600212345 ▶️முதலியார்பேட், சம்பத் – 9443287521. இந்த தகவலை ஷேர் செய்யவும்
News May 7, 2025
கடன் APPகளால் ஆபத்து – புதுகை காவல்துறையினர்

புதுச்சேரி மக்களே கடன் APPகள் என்ற பெயரில் GOOGLE PLAY STOREல் வலம் வருகிறது.இந்த APPகளை கடன் பெறக்கூடியவை என்று நம்ப வேண்டாம்.இந்த APPகள் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். கவனமாக இருங்கள் என புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.1930 என்ற சைபர் கிரைம் எண்ணில் புகார் அளிக்கலாம்.