News March 21, 2025

ஆளை மாற்றி கொலை செய்த கொடூரம்

image

மதுரை சிலைமானில் அழகர்சாமி என்ற டிரம்ஸ் இசைக் கலைஞர் கடந்த 12-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அலங்காநல்லூரில் சரவணன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்க கல்மேடு பகுதியைச் சேர்ந்த ஒருவரைத் தேடி வந்தபோது, ஒருவர் ஆளை மாற்றி அழகர்சாமியைக் காட்டியதால் இந்த கொலை நடந்தது தெரியவந்துள்ளது.

Similar News

News April 18, 2025

மதுரை மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

மதுரை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0452 –2546100
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️மின்தடை உதவி எண் – 1912
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்தவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்

News April 18, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (17.04.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 17, 2025

மதுரை : கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டு சிறை

image

திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சுமார் 150 கிலோ கஞ்சாவை கடந்த 2017 ஆம் ஆண்டு கடத்தி வந்ததாக மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் சசிகுமார் என்பவரை  கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறையும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து  மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

error: Content is protected !!