News April 1, 2024
ஜெய்சங்கர் கூறுவது பொய்

கச்சத்தீவு விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் திமுக மீது கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக எழுப்பியுள்ளதாக கூறிய அவர், கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மோடி, மக்களை திசை திருப்புவதாகவும் சாடினார். மேலும், இலங்கை திவாலான போது கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News August 12, 2025
இந்தியா கூட்டணியினருக்கு இரவு விருந்தளித்த கார்கே

இந்தியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரவு விருந்தளித்தார். இதில், சரத் பவார், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், திமுகவை சேர்ந்த கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட பல கூட்டணி கட்சி நிர்வாகிகளும், கூட்டணியில் இடம்பெறாத ஆம் ஆத்மி கட்சி பிரமுகர்களும் பங்கேற்றனர்.
News August 12, 2025
ஆகஸ்ட் 12: வரலாற்றில் இன்று

*1948 – கர்நாடகா முதல்வர் சித்தராமையா பிறந்தநாள்.
*1979 – தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் ஏ.வி.மெய்யப்பன் மறைந்த நாள்.
*1990 – அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
*2015 – சீனாவில் தியான்ஜின் மாகாணத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் குண்டுவெடிப்புகளில் 173 பேர் உயிரிழந்தனர், 800 பேர் காயமடைந்தனர்.
News August 12, 2025
போலி சாமியார் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியார் போக்சோவில் கைதானான். அம்மாநிலத்தில் ‘ஆப்ரேஷன் கலாநெமி’ என்ற பெயரில் போலி சாதுக்கள், துறவிகள் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையில் சிக்கியவன் தான் தீபக் குமார் சைனி. சிவன் வேடத்தில் திரியும் இவன், ஆசி பெற வந்த சிறுமியிடம், வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக கூறி அத்துமீறியுள்ளான். இவன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாம்.