News March 21, 2025

200 ரூபாய்க்கு பேரனை விற்ற மூதாட்டி!

image

முதுமையில் வறுமை வாட்டிய ஒருவரால் என்ன செய்ய முடியும்? ஒடிஷாவில் வீடற்ற மூதாட்டி மாண்ட் சோரன், தனது 7 வயது பேரனை பராமரிக்க முடியாமல் அவனை ஒரு தம்பதியிடம் விற்றுள்ளார். இதற்காக அவர் வாங்கியத் தொகை ரூ.200 மட்டுமே. பேரன் ஒரு நல்ல இடத்தில் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே அந்த பாட்டியின் எண்ணம். இதனை அறிந்த போலீசார், தம்பதியிடம் இருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர்.

Similar News

News March 28, 2025

காம சிந்தனைகளால் ஏற்படும் வஞ்சித தோஷம் நீங்க…

image

ஜாதகத்தில் சந்திரன் நிலை கெட்டிருந்தாலும், காம சிந்தனைகளால் மதி திசைமாறி நடப்பதாலும் வஞ்சித தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவப்பு நிற வஸ்திரம் அனைத்து 48 தீபங்களை ஏற்றி அம்மனை வழிபட்டு 11 ஏழைப் பெண்களுக்கு உணவிட்டு, சேலை தானம் அளித்தால் வஞ்சித தோஷம் விலகும் என ஐதீகம்.

News March 28, 2025

மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் டிமித்ரோவ்

image

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், அவர் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார். இதில், டிமித்ரோவ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

News March 28, 2025

மார்ச் 28: வரலாற்றில் இன்று

image

193 – உரோமப் பேரரசர் பெர்ட்டினாக்ஸ் பிரடோரியன் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1970 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி பெற்றார்.
2005 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

error: Content is protected !!