News March 20, 2025

H.ராஜா தமிழ்நாட்டுக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி: சேகர்பாபு

image

தமிழக அரசை அவதூறாக பேசும் H.ராஜா தமிழ்நாட்டுக்கு பிடித்த ஏழரை நாட்டு சனி என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை பாஜக விரும்பவில்லை என்றும், அப்பாவி தொண்டர்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கை கெடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவோடு எந்த மோதலுக்கும் திமுக தயாராக இருப்பதாகவும் சூளுரைத்துள்ளார்.

Similar News

News March 28, 2025

மதுவுடன் கலந்து குடிப்பதில் எது பெஸ்ட்?

image

மதுவில் குளிர்பானத்தை கலந்து குடிப்பதால் சுவை நன்றாக இருக்கும். ஆனால், ஆபத்து என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குளிர்பானத்தில் 330 மி. சர்க்கரை இருப்பதால், அதனை மதுவுடன் கலந்து குடிக்கும்போது உடல் பருமன், நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதுவே தண்ணீர் கலந்து அருந்தினால், மதுவால் உடலில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கலாம். இது உடலில் ஆல்கஹாலின் செறிவைக் குறைக்கும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

News March 28, 2025

இன்று புதிய சாதனை படைப்பாரா ‘கிங்’ கோலி?

image

ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதிய சாதனை படைத்துவரும் விராட் கோலிக்காக, மற்றொரு சாதனை காத்திருக்கிறது. இன்றைய போட்டியில் 55 ரன்கள் எடுத்தால், அவர் டி20 போட்டிகளில் 13,000 ரன்களை கடந்த 5-வது வீரர் ஆவார். இதுவரை, கிறிஸ் கெய்ல் (14,562), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610), சோயப் மாலிக்(13,557), பொல்லார்ட் (13,537) மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இன்றைய போட்டியில் கோலி சாதிப்பாரா?

News March 28, 2025

தெருநாய் தொல்லை… பிரதமரிடம் முறையிட்ட எம்.பி

image

தெருநாய் தொல்லை குறித்து பிரதமர் மோடியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் முறையிட்டுள்ளார். இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கை 6.2 கோடியாக அதிகரித்துள்ளதாகவும், உலகில் நிகழும் ஒட்டுமொத்த ரேபிஸ் மரணங்களில் 36% இந்தியாவில் நிகழ்வதாகவும் பிரதமரிடம் அவர் கூறியுள்ளார். போதுமான நிதி இல்லாததால், நகராட்சிகள் இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!