News March 20, 2025

பாட்டில்ல பால் கொடுக்க வேணாம் மம்மி

image

குழந்தைகளுக்கு வழக்கமாக தாய்மார்கள் பாட்டில்ல பால் கொடுக்குறது தான் வழக்கம். ஆனா குழந்தை பிறந்து 6 மாசம் ஆச்சுனா அத நிறுத்திடனும்னு சொல்றாங்க டாக்டர்ஸ். ஏன்னா, பாட்டில்ல பாலை குடிக்க குழந்தைகள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால் சர்க்கரை பற்களில் ஒட்டி பாக்டீரியா ஏற்படுமாம். அதனால் கப்பில் உணவை கொடுப்பதே சிறந்ததாம். குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்வதோடு, சீரான உணவுப் பழக்கத்தை பழக்குவது அவசியம்.

Similar News

News March 28, 2025

இங்கிலாந்து அரசர் 3ஆம் சார்லஸ் ஹாஸ்பிடலில் அனுமதி

image

இங்கிலாந்து அரசர் 3ஆம் சார்லஸ் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 76 வயதான அவர் சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். சிகிச்சையின் பக்கவிளைவுகள் காரணமாக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022ல் தனது தாயார் 2ஆம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து, இங்கிலாந்து அரசரானார் சார்லஸ்.

News March 28, 2025

IPL 2025: RCBயை பழித்தீர்க்குமா CSK..?

image

IPL தொடரில் இன்று, CSK – RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 7:30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கடந்த ஆண்டு Playoff வாய்ப்பைக் கெடுத்த RCBயை பழிதீர்க்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். முதல் போட்டியில் இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டதால், போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. யாரு ஜெயிப்பா என நினைக்கிறீங்க?

News March 28, 2025

கொடநாடு வழக்கு: இபிஎஸ்-ஐ விசாரிக்க திட்டம்?

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 500 பேரிடம் விசாரணை நடந்துள்ளது. நேற்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் விசாரணை நடைபெற்றது. கொடநாடு பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, கடந்த 2022ல் சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

error: Content is protected !!