News March 20, 2025
குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன்.. ஏப்.1இல் புது திட்டம்

மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு ஏப்.1 முதல் ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் அமலாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு பென்ஷன்தாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.10,000 பென்ஷன் கிடைக்குமாம். இதன் பயனைப் பெற ஏற்கெனவே தேசிய பென்ஷன் திட்டத்தில் இருப்போர், ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றும், பிறகு தேசிய திட்டத்துக்கு மாற முடியாது எனவும் கூறப்படுகிறது.
Similar News
News March 28, 2025
ATM சேவைக் கட்டணம் உயருகிறது

மற்ற வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் தற்போது ₹17 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை, ₹19ஆக உயர்த்த RBI அனுமதி அளித்துள்ளது. பேலன்ஸ் செக் செய்வதற்கான கட்டணம் ₹6இல் இருந்து ₹7ஆக உயர்த்தப்படவுள்ளது. இதனால், ATM சேவையை குறைவாக கொண்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பாதிக்கப்படுவர். இந்தக் கட்டண உயர்வு மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
News March 28, 2025
தவெகவின் முதல் பொதுக்குழு.. என்ன பேசுவார் விஜய்?

TVK முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறும் சூழலில், விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது. திமுக, பாஜகவை விமர்சித்து வரும் விஜய், இன்றும் அதனை தொடருவார் என்கின்றனர். அதே நேரத்தில், அதிமுக, பாஜக கூட்டணியை நோக்கி நகர்வதாக கூறப்படும் சூழலில், இனி அதிமுகவையும் அட்டாக் செய்வார் எனக் கூறப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம்!. விஜய் என்ன பேசுவார் என நினைக்குறீங்க?
News March 28, 2025
டெய்லி மேட்ச் பாக்குறீங்களா? கொஞ்சம் உஷார்!

IPL ஜுரம் ரசிகர்களைத் தொற்றிக் கொண்டு விட்டது. டெய்லி மேட்ச் பார்ப்பதை வழக்கமாக கொள்ளும் பலர், ஒரு மேட்சின் முடிவை, ரொம்ப சீரியஸாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது மூளையில் மகிழ்ச்சி, மன அழுத்த ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்களை உண்டாக்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். தங்களின் டீம் தோற்றுவிட்டால், பலரும் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர். இந்த வெற்றி தோல்விகள் தற்காலிகமானது தான் என்பதை உணருங்கள்.