News March 20, 2025

UPS பென்ஷன் திட்டம்: முக்கிய அம்சங்கள்

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) மூலம் ஓய்வுபெற்ற ஊழியர்கள், தாங்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% தொகையை பென்ஷனாக பெறலாம். இதற்கு 25 ஆண்டுகள் பணியாற்றி இருப்பது அவசியம். 10 ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்தாலும் அவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10,000 பென்சன் கிடைக்கும். பணியின்போது ஊழியர் இறந்தால், அவரது குடும்பத்திற்கு 60% ஊதியம் பென்சனாக கிடைக்க UPS வகை செய்கிறது.

Similar News

News March 28, 2025

பத்திரானா உள்ளே… CSK பிளேயிங் XI-ல் யார் யார்?

image

CSK அணியில் ரச்சின், ருதுராஜ்(C), திரிபாதி, தீபக் ஹூடா, சாம் கரன், ஜடேஜா, தோனி(W), அஸ்வின், நூர் அகமது, பத்திரானா, கலீல் அகமது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அதே போல், RCB அணியில், விராட் கோலி, பிலிப் சால்ட், படிக்கல், ரஜத் பட்டிதார்(C), லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா(W), டிம் டேவிட், குருணால் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள் உள்ளிட்டோர் விளையாடுகின்றனர். எந்த அணி பலமாக உள்ளது?

News March 28, 2025

‘அப்பா’ ஸ்டாலின்: விஜய் பேச்சால் அதிர்ந்த அரங்கம்!

image

தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து விஜய் பேசினார். நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தா, பெண்களின் பாதுகாப்பு நல்லா இருந்திருக்கும். ஆனா, இன்னைக்கு பச்ச புள்ளைங்க, படிக்கிற புள்ளைங்க, சின்ன பொன்னுங்க, வேலைக்கு போற பொன்னுங்களுக்கு நடக்குற கொடுமைய வாய்விட்டு சொல்ல முடியல சார். இதுல வேற உங்கள எல்லோரும் அப்பானு வேற கூப்பிடுறதா சொல்றீங்க என விஜய் பேசினார்.

News March 28, 2025

IPL: CSK அணி முதலில் பந்துவீச்சு…!

image

சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான CSK அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான RCB அணியும் சற்றுநேரத்தில் மல்லுக்கட்ட உள்ளன. இரு அணிகளும் முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இன்று களமிறங்குகின்றன. இதுவரை 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ள நிலையில், CSK 21 முறை, RCB 11 முறை வென்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. இன்னைக்கு யார் ஜெயிப்பாங்க?

error: Content is protected !!