News March 20, 2025
என் பேச்சை சரியாக புரிந்து கொள்ளவில்லை: வேல்முருகன்

தான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை புரிந்துக்கொள்ளாமல் அவையில் பேசுவதாக தவாக தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார். தனது பேச்சை அமைச்சர்கள் முதல் அதிமுக உறுப்பினர்கள் வரை தவறாக புரிந்துகொண்டதாக கூறிய அவர், தமிழை ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக ஆக்க வேண்டுமென்றே தான் பேசியதாக விளக்கமளித்தார். மேலும், <<15824134>>சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும்<<>>, அதற்கு கட்டுப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 28, 2025
மார்ச் 28: வரலாற்றில் இன்று

193 – உரோமப் பேரரசர் பெர்ட்டினாக்ஸ் பிரடோரியன் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1970 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி பெற்றார்.
2005 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
News March 28, 2025
வீக் எண்ட் மது குடிப்பவரா நீங்கள்?

வார இறுதியில் மது குடிப்பது என்பது இன்று பலரது பொழுதுபோக்காக மாறிவிட்டது. இப்படி, வார இறுதியில் குடிக்கும் பழக்கமும் பல தீமைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது வார நாட்களில் குடிக்கும் பழக்கம் இல்லாததால், வார இறுதியில் குடிப்பது சராசரியானது என்ற நினைப்பில் அதிகளவு மதுவை நுகர்கிறார்களாம். இதனால், மன உளைச்சல், அலுவலக பொறுப்பை நிர்வகிப்பதில் சிரமம் என பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.
News March 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 219
▶குறள்:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
▶பொருள்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.