News March 20, 2025

இரவு ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (20.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News September 14, 2025

விழுப்புரம்: அரசு மகளிர் கல்லூரியில் மாணவியர் சேர்க்கை

image

விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கலந்தாய்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதவியல் மற்றும் புள்ளியியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே, விருப்பமுள்ள மாணவிகள், கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம் என, கல்லூரி முதல்வர் தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

News September 14, 2025

விழுப்புரம் மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைகள், அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலவச உதவி மையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன, உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்படும் மாணவர்கள், 14417 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கல்வி தொடர்பான சந்தேகம் உள்ள மாணவர்களும் இந்த எண்ணை தொடர்புக் கொள்ளலாம். அவசியம் SHARE பண்ணுங்க

News September 14, 2025

‘விஜய் பின்னால் இருப்பது கொள்கையில்லா கூட்டம்’

image

தேர்தலில் அளித்த 90% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது. ஆனால், சிலர் அரசியலுக்காக, திமுக ஆட்சியை குறை கூறுகின்றனர் என, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கௌதம சிகாமணி, விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், “கூட்டம் கூடுவதால் தலைவனாக முடியாது. கொள்கையில்லா கூட்டம் தான், விஜய் பின்னால் கூடுகின்ற கூட்டம்” என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!