News March 20, 2025

மதுக்கடைகளில் இனி பெண்களும் பணியாற்றலாம்…!

image

மதுக்கடைகளில் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது மேற்குவங்க மாநிலம். 1909ம் ஆண்டு வங்க கலால் சட்டத்தை திருத்தி மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம், மதுக்கடைகள், மதுபான பார்களில் இனி பெண்களும் பணியாற்றலாம். பாலின பாகுபாட்டை களையும் நோக்கில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக அமைச்சர் சந்திரிமா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 28, 2025

பிரதமர் மோடியை விளாசிய விஜய்

image

தமிழ்நாடு என்றால் பிரதமர் மோடிக்கு அலர்ஜி என விஜய் கடுமையாக சாடியுள்ளார். பாஜகவை வெளிப்படையாக விமர்சிக்க தவெகவுக்கு பயம் என சிலர் கூறி வருவதாக பேசிய அவர், “யாரை பார்த்தும் எங்களுக்குப் பயமில்லை, மத்தியில் ஆளும் BJP, தமிழ்நாட்டில் ஆளும் DMK இரண்டும் மக்களுக்கு விரோதமான அரசு” என அழுத்தமாக கூறினார். பெண்களுக்கு எதிரான ஆட்சி நடத்தும் திமுகவுக்கு வரும் தேர்தலில் அவர்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

News March 28, 2025

‘மன்னராட்சி முதல்வரே’ வார்னிங் கொடுத்த விஜய்

image

அணை போட்டு ஆற்றை வேண்டுமானால் தடுக்கலாம், ஆனால் காற்றைத் தடுக்க முடியாது என விஜய் ஆவேசமாகக் கூறியுள்ளார். பொதுக்குழுவில் பேசிய அவர், யாருக்கும் இல்லாத தடையை தவெகவுக்கு ஆளுங்கட்சி கொடுப்பது ஏன் என வினவினார். ‘மன்னராட்சி முதல்வரே’ தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இரட்டை யானை தவெக கொடி நிச்சயம் பறக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என சூளுரைத்தார்.

News March 28, 2025

17ஆண்டு தொடர் தோல்வி.. வரலாற்றை மாற்றுமா RCB?

image

CSKவின் கோட்டையான சேப்பாக்கத்தில் இன்று RCB களம் காண்கிறது. சேப்பாக்கத்தில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள RCB ஒரு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு RCB தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. 17 ஆண்டுகளாக தொடரும் சோகத்துக்கு இன்றைய போட்டியில் விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு RCB ரசிகர்களிடையே உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!