News March 20, 2025

தேனி : இந்த கோவிலுக்கு இவ்வளவு சக்தியா?

image

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ளது வழிவிடும் முருகன் கோவில். இங்கு மூலவராக உள்ள முருக பெருமானுக்கு தினசரி பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளா ஏலத்தோட்ட வேலைக்கு செல்லும் வேலையாட்கள் இந்த கோவிலில் தினசரி வழிபாடு நடத்திச் செல்கின்றனர். நெடுந்தூர பயணத் திட்டம் நிறைவேறாமல் இருந்தால் இங்கு வழிபட்டுச் சென்றால் பயணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

Similar News

News March 31, 2025

தேனி :கிணற்றில் மிதந்த பெண் சடலம்

image

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் முனியாண்டி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலின் அருகே உள்ள கிணற்றில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவரின் உடல் மிதந்தது. அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 31, 2025

தேனி: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

தேனி மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பகிரவும்.

News March 31, 2025

தேனியில் வைகை அணை அருகே புதிய அணை

image

தேனி எம்.பி தங்கதமிழ்ச் செல்வன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது, வைகை அணையைத் தூர்வார ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி செலவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த செலவில் தூர் வாருவதற்குப் பதில் அருகில் புதிய அணை கட்டலாம் எனவும் கூறுகின்றனர். கூடுதல் நீர்தேக்கும் வகையில் நீர் தேக்கப்பகுதிக்கு அருகில் புதிய அணை கட்ட தயாராகி வருகிறது என்றார்.

error: Content is protected !!