News March 20, 2025
IPL-ல் அந்த தடை நீங்கியது – பவுலர்களுக்கு குட் நியூஸ்!

பந்தில் எச்சிலை தேய்ப்பது மூலம் பவுலர்கள் எளிதாக ஸ்விங் செய்ய முடியும். கொரோனா காலத்தில், நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இதற்கு ஐசிசி தடை விதித்தது. தற்போதுவரை சர்வதேச போட்டிகளில் இத்தடை தொடரும் நிலையில், IPL-ல் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பந்தில் எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ நீக்கியுள்ளது. சர்வதேசப் போட்டிகளுக்கும் தடை நீங்குமா? உங்கள் கருத்து என்ன?
Similar News
News September 17, 2025
காலக்கெடு நிறைவு: இன்று முதல் ₹5,000 அபராதம்

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தது. இனி புதிதாக தாக்கல் செய்பவர்களை கால தாமதம் என்றே வருமான வரித்துறை எடுத்துக்கொள்ளும். இனி அபராதம் செலுத்தினால் மட்டுமே ITR தாக்கல் செய்ய முடியும். அதன்படி, ஆண்டு வருமானம் ₹5 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் ₹1,000, ₹5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ₹5,000 செலுத்தி, வரும் டிச.,31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
News September 17, 2025
ஆயுத பூஜைக்கு அருள் தரும் ‘கருப்பு’

ஆயுத பூஜை அன்று ‘கருப்பு’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டும் அன்றே வெளியாக உள்ளதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் செம ஹேப்பியில் இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. சாய் அபயங்கர் பின்னணி இசை பணியை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
News September 17, 2025
செப்டம்பர் 17: வரலாற்றில் இன்று

*1879 – பெரியார் ஈ.வெ.ரா பிறந்தநாள். *1908 – ரைட் சகோதரர்களால் ஏவப்பட்ட விமானம் தரையில் மோதியதில், தாமஸ் செல்பிரிட்ச் என்பவர் உயிரிழந்தார். விமான விபத்தில் உயிரிழந்த முதலாவது மனிதர் இவராவார். *1948 – ஐதராபாத் சமஸ்தானம் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது. *1949 – திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறிய C.N.அண்ணாதுரை திமுகவை தொடங்கினார். 2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.