News March 20, 2025
கேஸ் பயனாளிகள் வங்கி கணக்கில் ரூ.150 ரூ.300

பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் நடுவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் நேற்று பேசும்போது, “தற்போது 2024 அக்டோபர் முதல் ஜனவரி 2025 வரை வாங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ.300 வீதமும், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Similar News
News March 28, 2025
மது போதையை ஏற்றி தங்க நகைகள் திருட்டு

அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் நபரிடம், பெண் ஒருவர், ஆசை வார்த்தை கூறி மது போதையை ஏற்றிவிட்டு, அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை உருளையான்பேட்டை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
News March 28, 2025
தேர்வு பயம் இல்லை – மாணவி பேட்டி

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்நிலையில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள இமாக்குலேட் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத வந்த மாணவி சாதனா செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல் முறையாக பொது தேர்வு எழுத வந்துள்ளதாகவும், வினாத்தாளை பார்த்துவிட்டு பதட்டம் இல்லாமல் தேர்வு எழுதினால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை எழுதிவிடலாம். இதனால் தேர்வு பயம் இல்லை என்றார்.
News March 28, 2025
5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு

மடுகரையில் 2022இல் நடந்த இறுதி ஊர்வலத்தில், ஏரிப்பாக்கத்தை சேர்ந்த மதியழகனுக்கும் முத்துநகர் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதியழகனை தீனதயாளன், அவரது நண்பர் சுதந்திரராஜ் ஆகியோர் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், தீனதயாளன், சுதந்திரராஜ் இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.