News March 20, 2025
தென்காசி மக்களுக்கு அடுத்த 4 தினங்களுக்கு ஹேப்பி நியூஸ்

தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக விட்டுவிட்டு கோடை மழை பெய்கிறது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் அடுத்த நான்கு தினங்களுக்கு கோடை மழை தொடர வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் வானிலை ஆய்வாளர் ராஜா தெரிவித்துள்ளார். பெரும்பாலான இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News September 14, 2025
தென்காசி மக்களே எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.
News September 14, 2025
தென்காசி: மூதாட்டி உயிரிழப்பு கீளினிக்கு சீல்

அடைக்கலப்பட்டணத்தில் சிகிச்சைக்காக சென்ற சுப்பம்மாள் (67) உயிரிழந்ததால், மருத்துவர் சரவணகுமாரின் கிளீனிக்குக்கு சீல் வைக்கபட்டது. உறவினர்களின் புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து, சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவுப்படி, அனுமதியின்றி இயங்கிய கிளீனிக்கில் அடிப்படை வசதிகள் இல்லாததால் நேற்று சீல் வைக்கபட்டது.
News September 14, 2025
தென்காசி: இந்த வாய்ப்பை MISS பண்ணாதீங்க!

தென்காசி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <