News April 1, 2024

உதயநிதி பேசும்போது கவனம் தேவை: நீதிமன்றம் எச்சரிக்கை

image

சனாதன சர்ச்சை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க கோரி உதயநிதி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த உச்சநீதிமன்றம், அடிப்படை உரிமைகளை பாதிக்கும் பிரிவில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது ஏற்புடையதல்ல; மூன்று வாரத்தில் மனுவில் மாற்றங்கள் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Similar News

News October 31, 2025

ஆப்கனுக்கு இந்தியா முழு ஆதரவு

image

பாக்., – ஆப்கன் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே ஆப்கனுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஆப்கனின் இறையாண்மை, சுதந்திரம் & ஒருமைப்பாட்டுக்கு முழுமையாக ஆதரவளிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்., தூண்டி விடுவதை இந்தியா உள்பட எந்த அண்டை நாடுகளும் ஏற்காது என்றும் கூறியுள்ளது.

News October 31, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 31, ஐப்பசி 14 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: தசமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை

News October 31, 2025

கார்த்திகாவுக்கு பைசன் படக்குழு அளித்த வெகுமதி

image

ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அந்த வகையில், இயக்குநர் மாரி செல்வராஜ், கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார். அப்போது, கார்த்திகாவுக்கு ₹5 லட்சத்தையும், கண்ணகி நகர் கபடி குழுவுக்கு ₹5 லட்சம் என மொத்தம் ₹10 லட்சத்தை ‘பைசன்’ படக்குழு சார்பாக மாரி அளித்தார்.

error: Content is protected !!