News March 20, 2025
BREAKING: என்கவுன்டரில் 22 பேர் பலி

சத்தீஸ்கரில் மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) நடத்திய தேடுதல் வேட்டையின்போது 22 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பீஜப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் காலை 7 மணிக்கு நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேடையின்போது நிகழ்ந்த மோதலில், DRG வீரர் ஒருவரும் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடக்கூடாது: CS

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து இன்று போராட்டம் நடத்துகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலாளர்(CS) முருகானந்தம் சர்குலர் அனுப்பியுள்ளார். அதில் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க கூடாது என்றும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு ‘No Work No Pay’ என்ற அடிப்படையில் சம்பளமும் வழங்கப்படாது என தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
கோயிலில் இருந்து வரும் போது… இத பிறருக்கு தராதீங்க

கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!
News July 9, 2025
நமீபியா புறப்பட்டார் PM மோடி

பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.