News March 20, 2025

ஒரே நாளில் 4 கொலைகள்: பேரவையில் இபிஎஸ் ஆவேசம்

image

TNல் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக சட்டப்பேரவையில் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். கொலை நடப்பது என்பது அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும், காவல்துறை செயலற்றதாகிவிட்டதாகவும் அவர் சாடினார். குடும்பத் தகராறு, முன்விரோதம் காரணமாகவே கொலைகள் நடந்ததாக CM ஸ்டாலின் விளக்கம் அளித்த நிலையில், இருவருக்கும் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது. தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Similar News

News September 17, 2025

மோடியின் சொத்து மதிப்பு இவ்வளவா?

image

தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக CM, PM-ஆக அரசின் தலைமை பொறுப்பில் இருப்பவர் மோடி. ஆனால், அவரிடம் சொந்தமாக நிலம், வீடு, கார் கூட இல்லை. 2024 தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அவருடைய சொத்து மதிப்பு ₹3.2 கோடி தான். அவர் தன்னுடைய சொத்தில் பெரும்பாலான பணத்தை வங்கியில்தான் டெபாசிட் செய்து வைத்திருக்கிறார். மேலும், அவர் யாருக்கும் கடன் கொடுத்ததும் இல்லை; வாங்கியதும் கிடையாதாம்.

News September 17, 2025

போன் ஹெல்தியா இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

போனுக்கும் full body health check-up செய்து, அனைத்து பாகங்களும் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம். முதலில் ‘Dialpad’-ஐ ஓபன் பண்ணுங்க *Brand-க்குரிய ரகசிய குறியீட்டை டயல் செய்யவும். குறியீட்டுக்கு <<17737284>>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க *ஓப்பனாகும் மெனுவில் ஒரு பாகத்தின் பெயரை கிளிக் செய்தால், அது எத்தனை % சரியாக உள்ளது என காட்டும். SHARE IT.

News September 17, 2025

சீமான் மீது தவெகவினர் போலீஸில் புகார்

image

விஜய்யின் அரசியல் வருகையை முதலில் வரவேற்றவர் சீமான். ஆனால், சமீபகாலமாக உன்னை(விஜய்யை) யார் அரசியலுக்கு வா என்று அழைத்தது என்ற தொனியில் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் தவெகவினர் சீமான் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் விஜய்யை சீமான் ஒருமையில் பேசியதாக கூறி தவெகவினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

error: Content is protected !!