News March 20, 2025

வீரப்பன் மகளுக்கு நாதகவில் முக்கிய பதவி!

image

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி NTKவில் இணைந்த அவருக்கு உடனடியாக கிருஷ்ணகிரி தொகுதியில் சீட்டு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய நபராக வலம் வந்த நிலையில், இன்று மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

Similar News

News March 21, 2025

IPL 2025 திருவிழா நாளை தொடக்கம்

image

IPL 2025ஆம் ஆண்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க நாள் விழாவை கேகேஆர் அணி நிர்வாகம் நாளை மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துகிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் போட்டித் தொடங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ், ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.

News March 21, 2025

அதிகாரமிக்கவர்களுக்கு தனி நீதியா?

image

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் <<15836861>>₹100 கோடிக்கும்<<>> அதிகமாக பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்து கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. இதுவே சாதாரண மக்களாக இருந்தால், பணமோசடி வழக்குப் போட்டு சிறையில் தள்ளப்படுவர். ஆனால், நீதிபதிகளாக இருந்தால் வேறு கோர்ட்டுக்கு மாற்றப்படுவார்கள். இது எப்படி நீதியாகும் என்று கேட்கின்றனர் நெட்டிசன்கள்.

News March 21, 2025

நடிப்புத் தொழிலில் இருந்து ஸ்ரீ கோபிகா விலகல்

image

நடிப்புத் தொழிலில் இருந்து முழுவதும் விலகுவதாக புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஸ்ரீ கோபிகா அறிவித்துள்ளார். சன்டிவியில் வெளியான ‘சுந்தரி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ கோபிகா. இதையடுத்து, சூர்யா டிவியில் ‘மாங்கல்யம் தந்நுனானே’ சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்தும், நடிப்புத் தொழிலில் இருந்தும் விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ கோபிகா பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!