News March 20, 2025
BREAKING: இந்திய அணிக்கு ₹58 கோடி பரிசு

சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றதற்காக இந்திய அணிக்கு BCCI ₹58 கோடி பரிசை அறிவித்துள்ளது. வீரர்கள், தேர்வுக்குழு, பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்த பணம் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. ICC கோப்பைகளை அடுத்தடுத்து வெல்வது அணியினரின் அர்ப்பணிப்பைக் காட்டுவதாக BCCI பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. முன்னதாக, CT கோப்பையை வென்றதற்காக ICC சார்பில் இந்திய அணிக்கு ₹19.53 கோடி பரிசு வழங்கப்பட்டது.
Similar News
News March 21, 2025
நடிப்புத் தொழிலில் இருந்து ஸ்ரீ கோபிகா விலகல்

நடிப்புத் தொழிலில் இருந்து முழுவதும் விலகுவதாக புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஸ்ரீ கோபிகா அறிவித்துள்ளார். சன்டிவியில் வெளியான ‘சுந்தரி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ கோபிகா. இதையடுத்து, சூர்யா டிவியில் ‘மாங்கல்யம் தந்நுனானே’ சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்தும், நடிப்புத் தொழிலில் இருந்தும் விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ கோபிகா பதிவிட்டுள்ளார்.
News March 21, 2025
நாளை கருப்புக் கொடி போராட்டம்: பாஜக அறிவிப்பு

மாநில CMகளை ஒருங்கிணைத்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து திமுக சார்பில் சென்னையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்நிலையில், திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் நாளை வீடுகளுக்கு முன் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடக்கும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அரசு மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபத்தை திசை திருப்பவே மறுசீரமைப்பு நாடகத்தை திமுக அரங்கேற்றி வருவதாகவும் அண்ணாமலை சாடியுள்ளார்.
News March 21, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளதாக ஐகோர்ட் மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பிஹார், தெலங்கானா மாநிலங்களில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து வாதிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.