News March 20, 2025
வரி செலுத்தாத கடை முன் கழிவுநீர் வாகனம் நிறுத்தம்

இராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகளில் 50000 குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என ரூ.17 கோடி வரை வரி வசூலிக்கப்பட வேண்டும். நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரி செலுத்தாத வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் முன் குப்பை வாகனம், கழிவுநீர் வாகனத்தை நிறுத்தி மிரட்டுகின்றனர்.
Similar News
News March 23, 2025
கண்மாயில் தவறி விழுந்து ஒருவர் பலி

திருவாடானை, கோடனுாரை சேர்ந்தவர் மகாலிங்கம்(47). நேற்று முன்தினம் முதல் மகாலிங்கத்தை காணாமல் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்மாய் நீரில் மகாலிங்கம் தலையில் அணிந்திருந்த தொப்பி மிதந்ததுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் மகாலிங்கம் உடலை மீட்டனர். கண்மாயில் கை, கால் கழுவ சென்ற போது தவறி விழுந்து அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
News March 23, 2025
மீண்டும் மஞ்சள் பை விருது; ரூ.10 லட்சம் பரிசுத்தொகை

ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை பயன்படுத்துபவர்கள் மீண்டும் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டினை தடுத்து மஞ்சப்பை பயன்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க இவ்வாறு அறிவிக்கப்பட்டது. *ஷேர்
News March 23, 2025
மனைவியை சமரசம் செய்ய சென்ற போது மோதல்: மூவருக்கு கத்திக்குத்து

உச்சிப்புளி, மோகன்குமார்(36), பிரியங்கா தம்பதியினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் மோகன்குமார் மனைவியை சமரசம் செய்து அழைத்து வர தனது உறவினர்கள் காளிதாஸ், வானீஸ்வரன் ஆகியோருடன் முத்துப்பேட்டை சென்றார். சமரசம் பேசியதில் வாக்குவாதம் முற்றியதில் பிரியங்கா தரப்பினர் மூவருக்கு கத்தி குத்து ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட இருவரை திருப்புல்லாணி போலீசார் தேடி வருகின்றனர்.