News March 20, 2025
திண்டுக்கல்: ரயிலில் வந்த பெண்ணிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு

திண்டுக்கல் அரண்மனைக்குளம் பகுதியைச் சோ்ந்தவர் உமா மகேஸ்வரி (38). கணவா் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். கணவரை பார்ப்பதற்காக சென்னை சென்ற உமாமகேஸ்வரி, சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயிலில் திண்டுக்கல்லுக்கு செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டார். உமாமகேஸ்வரி தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது பையில் வைத்திருந்த 4 பவுன் சங்கிலி திருடப்பட்டதாக புகாரில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 20, 2025
திண்டுக்கல்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.
News September 20, 2025
திண்டுக்கல்: B.E, B.Tech, B.Sc படித்தவர்களுக்கு வேலை!

திண்டுக்கல் மக்களே, இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 48 ‘அசோசியேட் இன்ஜினியர்’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Tech, B.Sc படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.72,000 முதல் ரூ.91,200 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 20, 2025
திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9942511127-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!