News March 20, 2025
அதிமுக நிர்வாகிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை!

கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் வீரையன் என்பவரைத் தாக்கியுள்ளார். இதனால் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில், திருவாரூர் கோர்ட், நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை, ₹6,000 அபராதம் விதித்துள்ளது.
Similar News
News March 21, 2025
சுய ஆப்ரேஷனால் உயிருக்குப் போராடும் இளைஞர்!

யூ டியூப் வீடியோவால் இளைஞரின் உயிர் இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உ.பியின் மதுராவை சேர்ந்த 32 வயது ராஜா பாபுவுக்கு திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. பல டாக்டர்களை பார்த்தும் வலி தீரவில்லை. யூடியூப் பார்த்து சுயமாக ஆப்ரேஷன் செய்து கொள்ள முடிவெடுத்து, வயிற்றை கிழித்தார். அதன்பின் நடந்தது எல்லாம் டிராஜடி தான். தற்போது ஆபத்தானக் கட்டத்தில் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
News March 21, 2025
விஜய்க்கு எதிராக களமிறங்கும் கமல்

2026 பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு விஜய், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆளும் திமுகவுக்கு எதிராக சூறாவளி பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். அவரின் பேச்சு மக்கள் மத்தியில் சென்றடைந்து விடக்கூடாது என்ற கணக்கு போட்ட ஆளும் தரப்பு, விஜய் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று, அவரது பேச்சுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பேசுமாறு கமலுக்கு அறிவுறுத்தியுள்ளதாம்.
News March 21, 2025
புதிய ரேஷன் கார்டுகள் எப்போது? அமைச்சர் விளக்கம்

புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த 57,327 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு அட்டை(Smart Card) அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் 18,09,607 புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், 1,67,795 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படும் என்றும் கூறினார்.