News March 20, 2025
லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு 16 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு

கோவை சின்னவேடம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த துரைராஜிடம், கடந்த 2009 ஆம் ஆண்டு, மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த தனபாக்கியம், மின் இணைப்பை மாற்றி வழங்க கோரி, ரூ.300 லஞ்சம் கொடுத்தார். அப்போது போலீசார் அவரை கைது செய்தனர். இவ்வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
Similar News
News September 20, 2025
கோவை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி பயிற்சி துவங்க உள்ளது. வரும் செப்.22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் சாய்பாபா காலனி அலுவலகத்தை நேரிலும், 0422 – 244 2186 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
கோவை: நவ.1 ஆம் தேதி முதல் இது கட்டாயம்!

பசுமையான மலைகள், இதமான சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காகவே கோவை வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வரும் நவ.1 ஆம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் போல வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை சோதனையிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
News September 20, 2025
கோவை: பழங்குடியினர் விருந்துடன் பரளிக்காடு சுற்றுலா!

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணைப்பகுதியையும், வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், கோவை, பரளிக்காடு சூழல் சுற்றுலா, வார இறுதி நாட்களில், வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்புவோர், <