News March 20, 2025
ஈரோட்டிற்கு வந்த நெல் மூட்டைகள்

ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்திற்காக, மயிலாடுதுறையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில், 2,000 டன் நெல் மூட்டைகள் ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்தது. அதனை சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரியில் ஏற்றப்பட்டு, ஈரோடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அதிகாரிகள் கூறினார்.
Similar News
News August 17, 2025
ஈரோடு மக்களே EB பில் அதிகமா வருதா?

ஈரோடு மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News August 17, 2025
மீன்வள உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு!

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் 4 மீன்வள உதவியாளர் பணி காலியாக உள்ளது. இதற்கு உரிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் அலுவலகம், டேம் ரோடு-1, பவானிசாகர் 638451, போன்: 04295-299261 என்ற முகவரிக்கு ஆக.28ம் தேதி மாலை 5:45 மணிக்குள் கிடைக்கும் வகையில் தபால் அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
News August 17, 2025
ஈரோடு: தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்!

ஈரோடு மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்களில் 3 முதல் 6 மாத தையல் பயிற்சி முடித்தவர்கள், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் சேவை இல்லங்களில் தையல் பயிற்சி, அரசின் மேம்பாட்டு திட்டத்தில் பயிற்சி முடித்தவர்கள் சமூக நலத்துறை சார்பில், தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில், ஆவணங்களுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0424-2261405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.