News March 20, 2025
சிதம்பரம் அருகே கொள்ளையனை சுட்டு பிடித்த போலீசார்

சிதம்பரம் சித்தலாப்பாடியில் போலீசாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஸ்டீஃபன் என்ற கொள்ளையன் சுட்டுப்பிடிப்பு. அண்ணாமலை நகரில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய ஆயுதங்களை மீட்க சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இவர் மீது தமிழகம் முழுவதும் 27 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் நடவடிக்கை.
Similar News
News August 10, 2025
கடலூர்: ரத்தசோகை பரிசோதனை செய்ய 71 குழுக்கள்

கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடம் இரத்தசோகை பரிசோதனைக்காக மருத்துவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், கிராமப்புற மருத்துவ அலுவலர், மருந்தாளர் ஆகிய 6 நபர்களை கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் மொத்தம் 71 குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஒரு குழுவின் மூலம் ஒரு வாரத்திற்கு 300 நபர்களை பரிசோதித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
கடலூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

கடலூரில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது. இதனால் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
✅பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
கடலூர் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம், திமுக கடலூர் மாவட்ட செயலாளர் மற்றும் திமுக மண்டல பொறுப்பாளர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமையில் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.