News March 20, 2025
அசிங்கமாக பேசிய Grok.. களமிறங்கிய IT அமைச்சகம்

X AI சாட்போட்டான Grok, பயனர்களின் கேள்விக்கு, ஆபாசமாக பதிலளித்தது குறித்து மத்திய IT அமைச்சகம் விசாரித்து வருகிறது. ஏன் இவ்வாறு நடந்தது என X நிறுவன ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு Grok நீண்ட நேரம் பதிலளிக்காமல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், ஹிந்தியில் கொச்சையாக மீண்டும் கேள்வி எழுப்பியதால், அதுவும் கொச்சையாக பதிலளித்தது.
Similar News
News March 21, 2025
இறையாண்மைக்கு எதிராக பேசினாரா ராகுல்?

காங்கிரஸ் MP ராகுல் காந்தி நேரில் ஆஜராக, உ.பி சம்பல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 15ல், காங்கிரஸ் தலைமை அலுவலக திறப்பு விழாவின்போது பாஜகவை மட்டுமின்றி இந்திய அரசையும் எதிர்த்து காங்கிரஸ் போராடுகிறது என பேசியிருந்தார். நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில்தான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
News March 21, 2025
நடிகர் விஷாலின் உறவினர் மீது மோசடி வழக்கு!

வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தொழிலதிபர் கிரிதிஷ் மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. நடிகர் விஷால் தங்கையின் கணவரும், நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிதிஷ் வீட்டுக் கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக ₹2.5 கோடி பணம் பெற்றதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. விசாரணை நடத்திய சிபிஐ, மோசடிக்கான முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிந்துள்ளது.
News March 21, 2025
சுய ஆப்ரேஷனால் உயிருக்குப் போராடும் இளைஞர்!

யூ டியூப் வீடியோவால் இளைஞரின் உயிர் இப்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. உ.பியின் மதுராவை சேர்ந்த 32 வயது ராஜா பாபுவுக்கு திடீரென அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது. பல டாக்டர்களை பார்த்தும் வலி தீரவில்லை. யூடியூப் பார்த்து சுயமாக ஆப்ரேஷன் செய்து கொள்ள முடிவெடுத்து, வயிற்றை கிழித்தார். அதன்பின் நடந்தது எல்லாம் டிராஜடி தான். தற்போது ஆபத்தானக் கட்டத்தில் ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளார்.