News March 20, 2025
பற்றியெரிந்த வீடு, மூதாட்டி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் அட்டகுறுக்கி கிராமத்தில் நேற்று, திருப்பதிநாயுடு மனைவி நாகம்மாள்(75) என்பவரது ஓட்டு வீடு முழுவதும் தீப்பற்றியது. அதில் நாகம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். VAO முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 28, 2025
கந்திகுப்பம் அருகே டிரான்ஸ்பார்மரில் 40 கிலோ காப்பர் வயர் திருட்டு

பர்கூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே சிந்தகம்பள்ளி பக்கமுள்ளது எட்டிகுட்டை. இந்த ஊரில் மின்சார டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. கடந்த 24ந் தேதி இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரில் இருந்த 40 கிலோ காப்பர் வயர்களை திருடிச் சென்றனர். அதன் மதிப்பு ரூ.35 ஆயிரம் ஆகும்.
அது குறித்து வரட்டனப்பள்ளி தாண்டவன்பள்ளம் மின் வாரிய இளநிலை பொறியாளர் சுப்பிரமணி கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார்
News March 27, 2025
கிருஷ்ணகிரியில் சிறிய இங்கிலாந்து

கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது இந்த தளி தோட்டம். இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால் இதமான வானிலை நிலவுகிறது. இது இங்கிலாந்தின் தட்பவெப்ப நிலையை ஒத்திருப்பதால் ‘சிறிய இங்கிலாந்து’ என்று பிரிட்டிஷார் பெயர் சூட்டினார். இந்த காலநிலை காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை பயிரிடுவதற்கு ஏற்றதாக அமைவதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு ஆண்டு முழுவதும் வருகிறார்கள். ஷேர் செய்யுங்கள்.
News March 27, 2025
வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனி வியாபாரிகள், வணிகா்கள் தா்ப்பூசணி, மாம்பழம், வாழைப்பழம் போன்ற கனிகளை செயற்கை வேதிப் பொருள்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்யக் கூடாது. கனிகளை விற்பனை செய்வோர் சட்ட விதிகளைப் பின்பற்றி உணவு வணிகத்தில் பதிவு அல்லது உரிமம் பெற்று காய்கனிகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.