News March 20, 2025

திருப்பூரில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

image

திருப்பூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி, ஆகியவற்றை செலுத்தக்கூறி, மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. மேலும் வார இறுதி நாட்களிலும் வரி வசூல் செய்யப்பட்டது. இந்நிலையில் முறையாக வரி செலுத்தாத, 568 வீடுகளில் குடிநீர் இணைப்பு, துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே வரி செலுத்தாதவர்கள் உடனடியாக வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Similar News

News September 19, 2025

திருப்பூர் மக்களே இனி எளிதாகிறது!

image

பொதுமக்களின் பயண வசதிக்காக ரயில்வே துறையுடன் இணைந்து ரயில் பயணிகள் முன்பதிவு சேவை இந்திய அஞ்சல் துறை மூலம் திருப்பூர் காந்தி நகரில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, தக்கல் முன்பதிவு சேவைகள் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பகுதி பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

திருப்பூர் கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் உறுதிமொழி

image

திருப்பூர்: தூய்மை மிஷன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.‌ அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாடாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மாவட்ட கலெக்டர் , மாநகராட்சி ஆணையாளர் , மேயர் உள்ளிட்டோர் தூய்மை பாரத இயக்கம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

News September 19, 2025

திருப்பூர்: தீரா நோயால் தூக்கிட்டு தற்கொலை!

image

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான்(71). இவர் கடந்த சில வாரங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகாததால் மன வருத்தத்தில் இருந்தவர் நேற்று(செப்.18) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!