News March 20, 2025
விவசாய நிலத்தை மனையாக மாற்ற அனுமதி இல்லை

விவசாய நிலங்களைப் பிரித்து மனைகளாக விற்க அனுமதியில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், விவசாய நிலத்தைப் பிரித்து வீட்டு மனையிடங்களாக மாற்ற முடியாது என்றார். மேலும், நிலங்களைப் பதிவு செய்வதைப் பொருத்தவரை, கிராம நத்தமாக உள்ள இடங்களைப் பொதுமக்களின் வசதிக்காக எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News September 8, 2025
சிறையில் ₹522 சம்பாதிக்கும் முன்னாள் MP

பாலியல் வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்கும் பிரஜ்வல் ரேவண்ணா நாள் ஒன்றுக்கு ₹522 சம்பாதிக்கிறார். பெங்களூரு பரப்ப அக்ரஹாரா சிறையில் உள்ள அவருக்கு நூலக எழுத்தர் பணி வழங்கப்பட்டுள்ளது. சக கைதிகளுக்கு புத்தகம் வழங்குவது, கொடுத்த புத்தகங்களின் பதிவுகளை பராமரிப்பது அவரது வேலை ஆகும். வாரத்திற்கு 3 நாள்கள் இந்த வேலையை அவர் செய்ய வேண்டும். இவர் முன்னாள் PM தேவ கவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 8, ஆவணி 23 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: பிரதமை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News September 8, 2025
ரயில்வேயில் வேலை… உடனே விண்ணப்பியுங்கள்

தெற்கு ரயில்வேயில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெற்கு ரயில்வேயில் 3,518 அப்ரண்டீஸ் பயிற்சி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கான கல்வி தகுதி 10th, 12th அல்லது ITI முடித்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி விண்ணப்பிக்க வயது 15 முதல் 24 வரை ஆகும். இதற்கு வரும் 25ஆம் தேதிக்குள் https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/ தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.