News March 20, 2025
குப்பையில் இருந்து மின்சாரம்: K.N.நேரு

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சென்னை, கோவை, மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பைகள் கொட்டும் இடம் மையப்பகுதிக்கு வந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், குப்பைகள் வெளியே பறக்காமல் இருக்க, குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது என்றார்.
Similar News
News March 21, 2025
இந்த 5 பழக்கங்கள்: வீட்டில் பணம் தங்கவே தங்காது

வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களே காரணம் என்கிறது வாஸ்து சாஸ்திரம். 1) வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2) கடவுளுக்கு உணவு படைப்பதற்கு முன்பு அதை ருசிக்கக் கூடாது. 3) மாலையில் விளக்கேற்றவே கூடாது. 4) இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5) பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.
News March 21, 2025
திமுக அரசுக்கு புதிய நெருக்கடி!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நிச்சயம் நடத்தி காட்டுவோம் என ராகுல் பேசியுள்ளது திமுக அரசுக்குத் தலைவலியைத் தந்துள்ளது. தெலங்கானா மாநில அரசு செய்ததை ஏன் தமிழக அரசு செய்யத் தயங்குகிறது என அன்புமணி, சீமான் உள்ளிட்டோர் வினவுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த யாருக்கு அதிகாரம் என்ற விவாதம் பேரவையிலும் நேற்று வெடித்தது. இதை எப்படி கையாள்வது என திமுக தலைமை ஆலோசித்து வருகிறதாம். உங்கள் கருத்து என்ன?
News March 21, 2025
ஒரு லட்சம் அட்மிஷனை கடந்தது

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் சேர்க்கை தற்போதுவரை 14 வேலை நாட்களைக் கடந்துள்ளது. இதில், நேற்று ஒரே நாளில் 8,000க்கும் அதிகமான மாணவர்களை பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.