News April 1, 2024
கிருஷ்ணகிரி: 100 பவுன் நகை, ரூ.1.2 கோடி பணம் பறிமுதல்

தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின்போது காரில் 10 லட்சம் ரூபாய் சிக்கிய நிலையை வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பெயரில் ஓசூரில் பிரஷர் லோகேஷ் குமார் என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு லோகேஷ் குமார் வீட்டில் இருந்து 100 பவுன் தங்க நகை மற்றும் 1.2 கோடி பணம் பறிமுதல் செய்து அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 14) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News August 14, 2025
கிருஷ்ணகிரியின் குட்டி இங்கிலாந்து எது தெரியுமா?

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ள தளி பகுதிக்கு லிட்டில் இங்கிலாந்து என்ற சிறப்பு பெயர் உண்டு. அடர்ந்த வனப்பகுதி மற்றும் குளிர்ந்த இதன் வானிலை இங்கிலாந்தை ஒத்திருப்பதால் ஆங்கிலேயர்கள் தளியை “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைத்து வந்தனர். சிறப்பு பெயருக்கு ஏற்ப குளிர்ந்த சூழலோடு, அறியப்படாத சுற்றுலா தலமாக தளி உள்ளது. ஷேர் பண்ணுங்க.
News August 14, 2025
ஓசூர் பகுதியில் பயங்கர விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம். ஓசூர் அருகே இன்று (ஆகஸ்ட் 14) கோப சமுத்திரம் பகுதியில் உள்ள சாலையில் பெரிய கனரக லாரி ஆனது இரண்டு கார்களின் மீது சாய்ந்து விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.