News March 20, 2025

திமுக ஆட்சியில் தினந்தோறும் கொலைகள்: அண்ணாமலை

image

திருநெல்வேலியில் நேற்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில் ஜான் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள் நடப்பதாகவும் x தளத்தில் அவர் விமர்சித்துள்ளார். காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் அதை பூட்டிவிட்டார்களா என தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News July 7, 2025

26/11 தாக்குதல்: பாக்., தொடர்பு உறுதியானது

image

26/11 தாக்குதலில் பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது. ராணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மும்பையில் தாக்குதலின் போது, தான் அங்கு இருந்ததையும், இந்தியாவில் நடந்த தாக்குதல்களில் பாக்.,க்கு நீண்டகாலமாக தொடர்பிருப்பதையும், குறிப்பாக, 26/11 தாக்குதலில் பாக். தொடர்பையும் அவர் உறுதிச் செய்துள்ளார். இந்த விசாரணைக்காக அமெரிக்கா அண்மையில் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

News July 7, 2025

வார விடுமுறை… சுற்றுலாப் பயணிகளுக்கு குட் நியூஸ்

image

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டிக்கு சுற்றுலா செல்பவர்களின் முதல் ஆசை மலை ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதே. மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஜூலை 11 – ஆக. 17 வரை வெள்ளி, ஞாயிறுகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதேபோல், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே ஜூலை 12 – ஆக. 18 வரை சனி, திங்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. டூர் போக ரெடியா..!

News July 7, 2025

பெரிய மாற்றமின்றி முடிவடைந்த பங்குச்சந்தை

image

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி 0.30 புள்ளிகள் உயர்ந்து 25,461.30 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்துள்ளது. பெரிய ஏற்றத்தாழ்வு இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது.

error: Content is protected !!