News March 19, 2025

கணவரை கொன்று கூறுபோட்டு, சாட்டிங் செய்த மனைவி

image

கணவர் <<15809593>>செளரப்பை <<>>ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று கூறுபோட்ட முஸ்கான், சிக்கிவிடக் கூடாது எனத் திட்டமிட்டுள்ளார். கொலைக்கு பிறகு செளரப் செல்போனுடன் ஹிமாச்சல் சென்ற இருவரும், அங்கிருந்து செளரப் தங்கைக்கு, வாட்ஸ்அப்பில் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார். ஹோலிக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார். ஆனால் போன் அழைப்பை மட்டும் தவிர்த்துள்ளார். எனினும், போலீசில் சிக்கிவிட்டார்.

Similar News

News March 20, 2025

குப்பையில் இருந்து மின்சாரம்: K.N.நேரு

image

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க உள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர் சென்னை, கோவை, மதுரையில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகக் கூறினார். மேலும், நகரங்களை விரிவாக்கம் செய்யும்போது குப்பைகள் கொட்டும் இடம் மையப்பகுதிக்கு வந்துவிடுவதாகக் குறிப்பிட்ட அவர், குப்பைகள் வெளியே பறக்காமல் இருக்க, குப்பைக் கிடங்கைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது என்றார்.

News March 20, 2025

‘ஹெபடைடிஸ் பி’ தடுப்பூசி விலை பல மடங்கு அதிகரிப்பு

image

குழந்தைகளுக்கு கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கும் ‘Hepatitis B’ தடுப்பூசி விலை பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 3 தவணைகளாக செலுத்தப்படும் இது, ஒரு டோஸ் ₹20 – ₹50க்கு விற்கப்பட்டது. திடீரென 3 டோஸ் கிட்டத்தட்ட ₹1,700 வரை விலை உயர்ந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

News March 20, 2025

அடுத்த 6 நாட்கள் மழை பெய்யக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

image

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், TNஇல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 25 வரை TNஇல் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலில் சிலப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!