News March 19, 2025

5 தலைமுறை கண்ட மூதாட்டி மரணம்

image

பல்லடம் அருகே பூமலூர் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமாத்தாள் (110) வயது மூப்பால் நேற்று உயிரிழந்தார். கணவர் முத்துசாமி 22 ஆண்டுகளுக்கு முன் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 44 பேரன், பேத்திகள் உள்ளனர். 2013இல் சதாபிஷேகம் கொண்டாடப்பட்டது. இறுதிச்சடங்கில் ஐந்து தலைமுறையினர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 19, 2025

திருப்பூர் மக்களே இனி எளிதாகிறது!

image

பொதுமக்களின் பயண வசதிக்காக ரயில்வே துறையுடன் இணைந்து ரயில் பயணிகள் முன்பதிவு சேவை இந்திய அஞ்சல் துறை மூலம் திருப்பூர் காந்தி நகரில் உள்ள தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு, தக்கல் முன்பதிவு சேவைகள் எளிதாக வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் பகுதி பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News September 19, 2025

திருப்பூர் கலெக்டர், மேயர் உள்ளிட்டோர் உறுதிமொழி

image

திருப்பூர்: தூய்மை மிஷன் இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.‌ அதன் ஒரு பகுதியாக கடந்த இரண்டு நாடாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படாத கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று மாவட்ட கலெக்டர் , மாநகராட்சி ஆணையாளர் , மேயர் உள்ளிட்டோர் தூய்மை பாரத இயக்கம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

News September 19, 2025

திருப்பூர்: தீரா நோயால் தூக்கிட்டு தற்கொலை!

image

திருப்பூர்: பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னான்(71). இவர் கடந்த சில வாரங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று குணமாகாததால் மன வருத்தத்தில் இருந்தவர் நேற்று(செப்.18) வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!