News March 19, 2025

சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்வு

image

இந்தியப் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் தொடர்ந்து 3 வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 148 புள்ளிகள் உயர்ந்து 75,449 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 73 புள்ளிகள் அதிகரித்து 22,907 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவடைந்து. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 31 பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது.

Similar News

News March 21, 2025

F1 ரேஸர் ஷூமேக்கரை அறிமுகம் செய்தவர் மரணம்

image

அயர்லாந்தைச் சேர்ந்த கார் பந்தய வீரரும், புகழ்பெற்ற F1 அணியின் உரிமையாளருமான எடி ஜோர்டன்(76) காலமானார். உலகின் தலைசிறந்த கார் பந்தய வீரர் என அறியப்படும் ஜெர்மனி வீரர் மைக்கேல் ஷூமேக்கரை அறிமுகப்படுத்தியது இவரது ஜோர்டன் கிராண்ட் பிரிக்ஸ் அணிதான். 1970- 1980 காலக்கட்டத்தில் கார் பந்தய வீரராக ஜொலித்த எடி ஜோர்டன், அதன் பிறகு கார் பந்தய அணியை உருவாக்கி F1 பந்தய உலகிற்குள் நுழைந்தவர் ஆவார்.

News March 21, 2025

200 ரூபாய்க்கு பேரனை விற்ற மூதாட்டி!

image

முதுமையில் வறுமை வாட்டிய ஒருவரால் என்ன செய்ய முடியும்? ஒடிஷாவில் வீடற்ற மூதாட்டி மாண்ட் சோரன், தனது 7 வயது பேரனை பராமரிக்க முடியாமல் அவனை ஒரு தம்பதியிடம் விற்றுள்ளார். இதற்காக அவர் வாங்கியத் தொகை ரூ.200 மட்டுமே. பேரன் ஒரு நல்ல இடத்தில் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே அந்த பாட்டியின் எண்ணம். இதனை அறிந்த போலீசார், தம்பதியிடம் இருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்கு அனுப்பியுள்ளனர்.

News March 21, 2025

அபாய சங்கிலியில் தொங்கிய பை.. என்னடா இது?

image

ரயில் பயணத்தில் வட மாநிலத்தவர் பண்ணும் அட்டகாசத்துக்கு எல்லையே இல்லை. அப்படி ஒரு சம்பவம் சென்னையில நடந்திருக்கு. ரயிலின் அபாயச் சங்கிலியில் வட மாநில இளைஞர் ஒருவர் பையை தொங்கவிட்டுள்ளார். இதனால் ஆந்திராவிற்கு சென்ற ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் 45 நிமிடங்கள் நின்றது. இதனால் ரயில்வே கேட்டில் காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் அவதி அடைந்தனர்.

error: Content is protected !!