News March 19, 2025
விழுப்புரம் ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை

விழுப்புரம் பனமலை ஊராட்சியில் போலியான இறப்புச் சான்றிதழ் வழங்கியதாக பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். உடனே மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட தாசில்தார் உத்தரவிட்டு விசாரணை செய்து பார்த்ததில் அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த போலி சான்றிதழ் இன்று காலை ஆட்சியர் ரத்து செய்தார். ஆட்சியர் மேற்கொண்டு வரும் துரிதமான நடவடிக்கைகளை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News March 20, 2025
விழுப்புரத்தில் 1000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.21) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2மணி வரை நடைபெற உள்ளது. வயது: 18 – 35 வயது வரை. கல்வி தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, பொறியியல், ஐடிஐ, முடித்தவர்கள் பங்கேற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04146 226417 மற்றும் 9499055906 என்ற தொலைபேசி எண்களில் அழைக்கவும். ஷேர் பண்ணுங்க
News March 20, 2025
திமுக பிரமுகர் சடலம் மீட்பு

திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் குமார்(71) காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக கொலை செய்து, செஞ்சி அருகே மேல்ஒலக்கூர் கிராமத்தில் புதைத்ததாக தாம்பரம் போலீசாரிடம் மூவரும் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில், இன்று(மார்ச்.21)செஞ்சி தாசில்தார் முன்னிலையில் குமாரின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News March 20, 2025
திருடு போன ஆட்டோ ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசார்

விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாகர்ஷா தெருவை சேர்ந்தவர் முகமது யாசீர்(32). இவர் தனது ஆட்டோவை நிறுத்திவிட்டு தொழுகைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இதுகுறித்து புகாரின்பேரில் துரிதமாக செயல்பட்ட போலீசார், ஒருமணி நேரத்தில் ஆட்டோவை கண்டுபிடித்தனர். துரிதமாக செயல்பட்ட போலீசாரை, காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.