News March 19, 2025
TVK சார்பில் தண்ணீர் பந்தல்: விஜய் உத்தரவு

TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து இடங்களிலும் கட்சி நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் அமைக்க பரிந்துரைத்துள்ளார். மேலும், தாங்கள் அமைத்த தண்ணீர் பந்தலில் தண்ணீர் உள்ளதா? என தினந்தோறும் தவறாமல் கவனிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 21, 2025
அமெரிக்காவின் உயரமான மனிதர் காலமானார்

அமெரிக்காவின் உயரமான மனிதரும், முன்னாள் போலீசுமான ஜார்ஜ் பெல் (67) காலமானார். 7 அடி 8 அங்கும் உயரம் கொண்ட அவர், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி படம், சில சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் வர்ஜீனியா காவல்துறையில் துணை செரீப்பாக பணிபுரிந்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு வரை உலகின் உயரமான மனிதர் என்ற கின்னஸ் சாதனையையும் அவர் புரிந்திருந்தார். இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 21, 2025
IPL 2025 திருவிழா நாளை தொடக்கம்

IPL 2025ஆம் ஆண்டு போட்டிகள் நாளை தொடங்குகின்றன. தொடக்க நாள் விழாவை கேகேஆர் அணி நிர்வாகம் நாளை மாலை 6 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடத்துகிறது. விழாவில் நடிகர், நடிகைகளின் கண்கவர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பின்னர் இரவு 7.30 மணியளவில் போட்டித் தொடங்கும். முதல் போட்டியில் கொல்கத்தா ரைடர்ஸ், ஆர்சிபி அணிகள் மோதவுள்ளன.
News March 21, 2025
அதிகாரமிக்கவர்களுக்கு தனி நீதியா?

டெல்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் <<15836861>>₹100 கோடிக்கும்<<>> அதிகமாக பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணிமாற்றம் செய்து கொலீஜியம் உத்தரவிட்டுள்ளது. இதுவே சாதாரண மக்களாக இருந்தால், பணமோசடி வழக்குப் போட்டு சிறையில் தள்ளப்படுவர். ஆனால், நீதிபதிகளாக இருந்தால் வேறு கோர்ட்டுக்கு மாற்றப்படுவார்கள். இது எப்படி நீதியாகும் என்று கேட்கின்றனர் நெட்டிசன்கள்.