News March 19, 2025
கருப்பாநதி அணையில் 34 மில்லி மீட்டர் மழை பதிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று கோடை மழை பரவலாக பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையநல்லூரில் உள்ள கருப்பா நதி அணைப் பகுதியில் 34 மில்லி மீட்டர், கடையம் ராமநதி அணைப் பகுதியில் 3 மில்லி மீட்டர், அடவி நயினார் அணைப் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News September 29, 2025
தென்காசி: பண்பொழி கோயிலில் அக்.01 கன்னி பெண்களுக்கு பூஜை

தென்காசி, பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை நகரீஸ்வரர் முடையார் கோயிலில் வரும் அக்டோபர் 1ம் தேதி நவராத்திரி பூஜை சரஸ்வதி பூஜை, 108 கன்னிப் பெண்களுக்கு பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருணாச்சலம், கோவில் உதவி ஆணையர் கோமதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
News September 28, 2025
தென்காசி: டெங்கு கொசு ஒழிப்பு பேரவை கூட்டம்

டெங்கு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் இன்று மாவட்ட பொருளாளர் வனஜா தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் துவக்கவுரை ஆற்றினார். அக்டோபர் 26 அன்று மதுரையில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாடு தொடர்பாகவும், நவம்பர்16-அன்று சென்னையில் நடைபெறும் கவன ஈர்ப்பு பேரணி குறித்து உரையாற்றினர்.
News September 28, 2025
தென்காசி: 12th போதும்; மத்திய அரசு வேலை ரெடி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<