News March 19, 2025

2 மனைவிகள் இருந்தும் சிறுமி வன்கொடுமை.. அதிரடி தீர்ப்பு

image

காஞ்சிபுரம் அருகே 2 மனைவிகள் இருந்தும் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கொடூரன் ஜெயபால், கடந்த 2019இல் தனது மனைவிகள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். ஜெயபாலுக்கு ₹15,000 அபராதமும் விதித்துள்ள கோர்ட், சிறுமிக்கு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு ஆணையிட்டுள்ளது.

Similar News

News March 23, 2025

ஏர் இந்தியாவை திட்டி தீர்த்த வார்னர்!

image

ஆஸி. கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஏர் இந்தியா நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ‘விமானி இல்லாத போது, விமானத்தில் பயணிகளை ஏற்றி மணிக்கணக்கில் காக்க வைப்பது ஏன் என ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து அவர் கேள்வியை எழுப்பியுள்ளார். அவரின் பதிவு வைரலாக, பெங்களூருவின் மோசமான வானிலை காரணமாக, விமானம் நிறுத்தி வைக்கப்பட்டதாக ஏர் இந்தியா அவருக்கு பதிலளித்துள்ளது.

News March 23, 2025

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மழை

image

கோடை வெயில் வாட்டி வைத்து வரும் வேளையில், பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு (11 மணி வரை) 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கணித்துள்ளது.

News March 23, 2025

மரணம் எப்படியெல்லாம் வருது பாருங்க!!

image

இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சரோஜினியை(55), மரணத்தின் பிடியில் இருந்து டாக்டர்கள் காப்பாற்றுகின்றனர். ஆனாலும், அவருக்கு மரணக்கயிறு, லிப்ட் கயிற்றின் ரூபத்தில் வந்துள்ளது. ஹாஸ்பிடலில் அவரை லிப்டில் அழைத்து சென்ற போது கயிறு அறுந்து, லிப்ட் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. இதில், சரோஜினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவை வெல்லும் சக்தி மனிதனுக்கு இல்லையே!

error: Content is protected !!