News March 19, 2025

திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் கொலை

image

DMK EX எம்பி குப்புசாமியின் உதவியாளரும், தொமுச நிர்வாகியுமான குமார் (71) படுகொலை செய்யப்பட்டார். ECR-ல் உள்ள உறவினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கும்பலை தட்டிக்கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்ற குமாரை காரில் கடத்திச் சென்று, செஞ்சி அருகே கொலை செய்து சடலத்தை புதைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News March 19, 2025

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைக்கிறீங்களா… எச்சரிக்கை!

image

செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!

News March 19, 2025

கோலிக்கு பதிலடி கொடுத்த பிசிசிஐ

image

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விராட் கோலி அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ செயலாளர் சாக்கியா, சிலர் கோபப்படுவதற்காக பிசிசிஐ விதிகள் மாற்றப்படாது எனக் கூறினார். முன்னதாக, வெளிநாடுகளில் விளையாட செல்லும் இந்திய அணி வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2025

அரசு ஊழியர்களின் Retirement.. மத்திய அரசின் விளக்கம்

image

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவோ, குறைக்கவோ திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!