News April 1, 2024

பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்

image

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப் விநியோகிக்க உள்ளனர். தொடர்ந்து, இப்பணிகள் ஏப்.13ஆம் தேதி நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Similar News

News November 9, 2025

விழுப்புரம்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

BREAKING: அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது

image

தங்கள் கட்சி வளர்ந்துள்ளதால், எந்த கூட்டணிக்கு சென்றாலும் 5 சீட்டுக்கு குறையாமல் கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி புதிய குண்டை வீசியுள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக போலவே தற்போது புரட்சி பாரதமும் விலகியிருந்து கூட்டணி கதவைத் திறந்து வைத்துள்ளது.

News November 9, 2025

‘How to kill old lady’ யூடியூப் பார்த்து கொலை செய்த மருமகள்!

image

‘How to kill an old lady’ என யூடியூப்பில் வீடியோ பார்த்து, மருமகள் மாமியாரை கொலை செய்துள்ளார். விசாகப்பட்டினத்தில், கணவரிடம் மாமியார் பொய் சொல்வதை பொறுத்து கொள்ளாத மருமகள், சதித்திட்டம் தீட்டியுள்ளார். வீட்டிலேயே மாமியாரை கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியுள்ளார். பூஜை அறையில் விளக்கு தீப்பிடித்து மாமியார் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய நிலையில், விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.

error: Content is protected !!