News March 19, 2025
கணவனை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற மனைவி

உ.பி.யில் பெண் ஒருவர் தனது கணவரை கொடூரமாக கொன்றுள்ளார். லண்டனில் வணிகக் கப்பலில் அதிகாரியான சவுரப், தனது மனைவி முஸ்கானின் பிறந்தநாளுக்காக இந்தியா வந்துள்ளார். இதனிடையே, காதலனுடன் உறவில் இருந்த முஸ்கான், கணவனைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி, காதலனுடன் சேர்ந்து சவுரப்பை கொன்று துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் வைத்து சிமெண்டால் மூடியுள்ளார். போலீசார் விசாரணையில் இக்கொடூரம் தெரியவந்துள்ளது.
Similar News
News March 19, 2025
பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைக்கிறீங்களா… எச்சரிக்கை!

செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!
News March 19, 2025
கோலிக்கு பதிலடி கொடுத்த பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் குடும்பத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விராட் கோலி அண்மையில் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பிசிசிஐ செயலாளர் சாக்கியா, சிலர் கோபப்படுவதற்காக பிசிசிஐ விதிகள் மாற்றப்படாது எனக் கூறினார். முன்னதாக, வெளிநாடுகளில் விளையாட செல்லும் இந்திய அணி வீரர்கள், தங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்லக்கூடாது என பிசிசிஐ உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
News March 19, 2025
அரசு ஊழியர்களின் Retirement.. மத்திய அரசின் விளக்கம்

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ஆக உள்ளது. இதனை 62 ஆக உயர்ந்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சிகளால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஓய்வு பெறும் வயதை உயர்த்தவோ, குறைக்கவோ திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.