News March 19, 2025

புழல் ஜெயில் கைதி திடீர் மரணம்

image

செங்கல்பட்டு போந்தூர் பகுதியை சேர்ந்த ராஜமாணிகம், பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றர். 2022ஆம் ஆண்டில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பல்வேறு உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 9-ந் தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 19, 2025

தீராத நோய்களைத் தீர்க்கும் வீரராகவப் பெருமாள்

image

திருவள்ளூர் நகருக்கே பெருமை சேர்க்கும் விதமாக, புகழ் கூட்டும் விதத்தில் எழுந்தருளியிருக்கிறார் வீரராகவ பெருமாள். சிவபெருமான் இத்தலத்து பெருமாளை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றதாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. தீராத நோயால் வருந்துபவர்கள் இத்தலத்தில் 9 கரைகளுடன் அமைந்துள்ள தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை தரிசித்தால் நோய்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

ஒன்றரை வயது குழந்தையை கடித்த வெறிநாய்

image

திருத்தணி அருகே வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை வெறி நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு மேல் சிகிச்சைக்காக ரூ. 4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கூலி வேலை செய்து வரும் அக்குழந்தையின் தந்தை பழனி செய்வதறியாமல் தவித்து வருகிறார்.

News March 19, 2025

8th Pass செய்திருந்தால் போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம் கிடையாது.நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த <>விண்ணப்பத்தை<<>> பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும்.

error: Content is protected !!