News March 19, 2025

ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழி தேரோட்டம் 2025 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உடனிருந்தார். மேலும், இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 14, 2025

திருவாரூர் அருகே புதுமாப்பிளை தற்கொலை

image

திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை அருகே உள்ள உட்காடு தென்பரை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (33). இவருக்கு திருமணமாகி 1½ மாதம் ஆகிறது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த பிரபாகரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

திருவாரூர்: உங்கள் பெயரில் இத்தனை SIM -ஆ??

image

திருவாரூர் மக்களே, உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளதென்று உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? அப்படியென்றால், மத்திய அரசின் சஞ்சார்சாத்தி இணையம் மூலமாக உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி எத்தனை சிம் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடியும். <>இங்கே க்ளிக் <<>>செய்து இப்போதே செக் பண்ணுங்க. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

திருவாரூர்: சிறப்பு கல்வி கடன் முகாம் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்தும், உயர்கல்வி பயில நிதியின்றி தவிக்கும் மாணவர்களுக்கென சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வரும் செப்.17 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெறும் முகாமில், மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி கட்டண விவரம், ஆதார் மற்றும் பான் கார்டுடன் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர்

error: Content is protected !!