News March 19, 2025
போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசையைச் சேர்ந்தவர் அருள்நேசன் (29). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
Similar News
News March 19, 2025
டாஸ்மாக் கூடுதல் தொகை வசூல் யாருக்கு செல்கிறது?

₹1000 கோடி <<15808812>>டாஸ்மாக் <<>>ஊழல் புகாரை அடுத்து, குவாட்டருக்கு ₹40 கூடுதலாக வசூலித்த விவகாரத்தையும் பாஜக அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து எச்.ராஜா, மாநிலம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ₹40 என கணக்கிட்டால், அதில் மட்டும் மறைமுகமாக எத்தனை கோடி கூடுதல் தொகை வரும்?, அந்த பணம் யார் யாருக்கெல்லாம் செல்கிறது? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 19, 2025
5 நிமிடம் சார்ஜ் செய்தால் 470KM பயணிக்கலாம்.. அசத்தும் BYD

சீன EV கார் தயாரிப்பு நிறுவனமான BYD, வணிக சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5-8 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம், தங்கள் காரை 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே, 470KM தூரம் பயணிக்கலாம் என்கிறது. இதற்காக, சீனா முழுவதும் 4,000 அதிவேக சார்ஜிங் ஸ்டேஷன்களை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது போட்டியாளர்களான Tesla, Benzக்கு சவாலாக கருதப்படுகிறது.
News March 19, 2025
இன்று போராட்டம் நடத்தினால் சம்பளம் இல்லை: அரசு வார்னிங்

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவித்திருந்தன. இந்நிலையில், மருத்துவ விடுப்பை தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ எடுக்கக்கூடாது என்றும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் ஒருநாள் ஊதியம் பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.