News March 18, 2025
இதுதான் நாட்டுக்கு தேவை: ராகுல் காந்தி

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் நாட்டுக்கு தற்போது தேவை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கும் அவர், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனை நடத்திக் காட்டுவோம் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
Similar News
News September 21, 2025
இன்று IND vs PAK: வெற்றி யாருக்கு?

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முந்தைய போட்டியில் இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் போனது, தொடரை விட்டு வெளியேறுவோம் என பாக்., மிரட்டியது என பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. லீக் போட்டியில் தோற்றதற்கு பாக்., பழிதீர்க்குமா அல்லது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
News September 21, 2025
தமிழகத்தில் 5 நாள்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார்

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று CM ஸ்டாலின் போலியாக சூளுரைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். TN-ல் கடந்த 5 நாள்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
News September 21, 2025
இதை செய்ய உங்கள் நாள் சிறப்பாகும்

நமது வாழ்வில் ஒவ்வொரு நாளையும் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. காலை எழுந்தவுடன் அதை நாம் எவ்வாறு அணுகுகிறோமோ அதை வைத்தே அன்றைய பொழுதானது நல்லதொரு பொழுதாக அமைகிறது. அப்படி எழுந்தவுடன் அவசியம் செய்ய வேண்டிய சில பழக்கங்களை மேலே புகைப்படங்களில் பார்க்கலாம்.