News March 18, 2025
உயர்ந்த மனிதர் காலமானார்!

உலகின் உயரமான மனிதர்களில் ஒருவரான பாகிஸ்தானை சேர்ந்த நசீர் சூம்ரோ (55), உடல்நலக்குறைவால் காலமானார். சிந்து மாகாணத்தை சேர்ந்தவரான நசீர், 7 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். சராசரி மனிதர்களை விட இவர் 3 அடி உயரம் கொண்டவர். நுரையீரல் நோயாலும், உடல் இணைப்பு பகுதிகளில் வலியாலும் பல ஆண்டுகளாக அவதியுற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். பாகிஸ்தானின் அடையாளமாக உலகம் முழுவதும் வலம் வந்தவர் சூம்ரோ.
Similar News
News September 21, 2025
நாங்கள் முழுநேர அரசியல்வாதிகள் அல்ல: கமல்

தங்கள் கட்சியில் யாருமே 24*7 அரசியல்வாதி கிடையாது என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அனைவருமே வேலை பார்ப்பவர்கள் எனவும், அவர்களின் வேலையை செய்து கொண்டே, மீதமிருக்கும் நேரத்தில் கட்சிப் பணிகளை செய்வார்கள் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் நூறாண்டுகள் செயல்பட வேண்டும் எனவும், தேர்தல் பிரசாரம் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
இன்று IND vs PAK: வெற்றி யாருக்கு?

ஆசிய கோப்பை தொடரில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. முந்தைய போட்டியில் இந்திய வீரர்கள் கைகொடுக்காமல் போனது, தொடரை விட்டு வெளியேறுவோம் என பாக்., மிரட்டியது என பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது. லீக் போட்டியில் தோற்றதற்கு பாக்., பழிதீர்க்குமா அல்லது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடருமா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
News September 21, 2025
தமிழகத்தில் 5 நாள்களில் 17 பாலியல் குற்றங்கள்: நயினார்

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று CM ஸ்டாலின் போலியாக சூளுரைப்பதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். TN-ல் கடந்த 5 நாள்களில் மட்டும் 17 பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடந்திருப்பதாகவும், அவற்றில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை என்பது தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.